Wednesday, May 9, 2012

ஓர் நாள் இரவு



கனவுகள் கருகியதால் உறக்கம் தொலைத்து
இரவின் வழி சென்றேன்

வாழ்வும் சாவும் நிகழ்ந்த இடங்கள்
எண்ணிட்ட கட்டிடங்களாக தெரிந்தது

முகமறியா தோழன் போல காதினுடே
முணுமுணுத்தது பனி காற்று

பூமி மொத்தம் மனிததிரள் இன்றி
இரவுக்கு அடங்கி தூங்குகிறதா?

அல்லது !!!

மனிதம் தொலைத்து போகம் மட்டும்
கொண்டு வாழும் மாந்தர்தம்

பாரத்தின் வலி சகிக்க முடியாமல்
மெல்ல மெல்ல சாகிறதா

மேகம் விலக்கி எட்டி பார்க்கும்
நட்சத்திரத்தின் ஒளி கீற்று

அதை எங்கோ ஓர் காதலன்
காதலியின் கண்களில் உணர்கிறான்.

புதிதாய் ஒரு சிந்தனை!

அழிந்த பூமி விடியலில் மீண்டும்
புத்தம் புதிதாய் பிறக்குமோ

நான் இன்றோடு இறந்து மீண்டும்
புதிதாய் பிறக்க போகின்றேன்

புதிய மனிதனாய் புதிய கனவுகளோடு
சிவந்த கீழ்வானம் நோக்கி நடந்தேன்...